Friday, May 25, 2012

மேல்கொத்மலை நீரணையைச் சூழ தற்காலிக இரும்பு வேலிகள் அமைப்பு தலவாக்கலை நகருக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை நீரணைப் பிரதேசத்தைச் சூழ தற்காலிக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மேற்படி நீரணைப் பிரதேசம் பாதுகாப்பற்ற வகையில் காணப்படுவது இதேவேளை, இந்த நீரணையில் கடந்த 20ஆம் திகதி சிறுவன் ஒருவன் விழுந்து உயிரிழந்தமையைத் தொடர்ந்து இந்த தற்காலிக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன

Tuesday, May 15, 2012

மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன






மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று 15ம் திகதி நான்கு மணித்தியாலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை வான் கதவுகள் திறக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதி பணிப்பாளர் எரந்தன ஹெமவர்த்தன தெரிவித்தார். இதனால் கொத்மலை ஓயாவை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் விடுவிக்கப்படாத அதிக நீர் அளவு இன்று விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு செல்வதுபோல் மலையகத்திற்கும் வாருங்கள் - இந்திய குழுவுக்கு அழைப்பு




இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அரசியல் பிரதிநிதிகள் மலையகத்திற்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை தரத்தினையும் பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கண்காணிக்க விஜயம் செய்திருந்த இந்திய அரசியல் பிரமுகர்களை ஒரு பிரபல மலையகம் சார்ந்த தொழிற்சங்கம் மலையகத்தின் ஒரு சில குறிப்பிட்ட நகரங்களுக்கு கூட்டி வந்து மாலை அணிவித்து அனுப்பியது போல் அல்லாமல் இம்முறை அவர்கள் தோட்டப்புறங்களுக்கும் குறிப்பாக நுவரெலிய, மஸ்கெலியா, ஹட்டன் போன்ற தேயிலை தோட்டங்களில் வேலை செய்கின்ற தோட்டங்களுக்கு விஜயம் செய்ய வேண்டும்.

இந்தியாவிலிருந்து பெரியங்கங்காணியினரால் அலைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளியினர் இன்னும் லயன் முறையிலேயே வாழ்கின்றனர். இது தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் நேரடியாக சென்று பார்வையிட்டதால் தேயிலை தோட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் படும் அவஸ்தையினை புரிந்து கொள்ள முடியும். மாறாக எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது அரசியல்வாதிகள் சொல்வதையோ கேட்டுக்கொள்வது உண்மைக்கு புறம்பானது என மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
                                                      உடலை விட்டு போன உயிர்
                                                           கிடைக்கவில்லே எங்கு தேடியும்
                                                                       சோர்ந்து விட்டேன்
                                                     பாதம் பட்டதும் மலையக மண்ணில்
                                                            தேடிய உயிர் மின்னலாய்
                                                                       வாந்தது போல் மெய்
                                                     சிலிர்த்ததை உணர்ந்தேன்....................